அதிகம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள்

கருப்பின மக்களில் பலர் அடிமட்ட வேலைகளை செய்கின்றனர். அவர்களால், சுகாதார வசதியை நாட முடிவதில்லை, இதன் காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அதிகம் வெளி வேலைகள் பார்ப்பதால், அதிகம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள், அதனால் இறக்கிறார்கள் என மருத்துவர் பிலிஸ் கூறினார். லூசியானா மாநிலத்தில், இறந்தவர்களில் 70% பேர் கருப்பினத்தவர்கள். அம்மாநில ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் எண்ணிக்கை 32% மட்டுமே. இலினாய்ஸ் மாநிலத்தில் இறந்த நோயாளிகளில் சுமார் 42% பேர் கருப்பினத்தவர்களாக உள்ளனர், மாநில மக்கள்தொகையில் அவர்கள் எண்ணிக்கை 15% மட்டுமே.